அறிவுப்பசி தீர்க்கும் வில்லிப்பட்டி இளைஞர்கள்

Added : ஜூலை 07, 2018 | கருத்துகள் (4) | |
Advertisement
சிவகங்கை: சிவகங்கை அருகே வில்லிப்பட்டியில் கிராம இளைஞர்களே நுாலகம் நடத்தி வருகின்றனர். மேலப்பூங்குடி ஊராட்சி வில்லிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கிராம இளைஞர்களுடன் இணைந்து 2012 ல் அக்கிராமத்தில் நுாலகத்தை ஏற்படுத்தினார். அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையிலும் மற்ற இளைஞர்கள் நுாலகத்தை நடத்தி வருகின்றனர். ஊராட்சிக்கு சொந்தமான பழைய ரேடியோ அறையில்
அறிவுப்பசி தீர்க்கும் வில்லிப்பட்டி இளைஞர்கள்

சிவகங்கை: சிவகங்கை அருகே வில்லிப்பட்டியில் கிராம இளைஞர்களே நுாலகம் நடத்தி வருகின்றனர்.


மேலப்பூங்குடி ஊராட்சி வில்லிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கிராம இளைஞர்களுடன் இணைந்து 2012 ல் அக்கிராமத்தில் நுாலகத்தை ஏற்படுத்தினார். அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையிலும் மற்ற இளைஞர்கள் நுாலகத்தை நடத்தி வருகின்றனர். ஊராட்சிக்கு சொந்தமான பழைய ரேடியோ அறையில் செயல்படுகிறது. முதற்கட்டமாக நாளிதழ், வார இதழ்களை மட்டும் வாங்கி வந்தனர். 2014 ல் பலரது உதவியோடு புத்தகங்கள் வாங்கப்பட்டன. வில்லிப்பட்டி, அழகம்பட்டியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர், இளைஞர்கள் வாசகர்களாக உள்ளனர். தற்போது 300 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கட்டடம் சேதமடைந்ததால் புத்தகங்களை ஒருவரது வீட்டில் வைத்துள்ளனர்.அலைபேசியில் ராஜா கூறுகையில், ''2012 ல் ஆட்டோ டிரைவராக இருந்தேன். 'தினமலர்' விரும்பி படிப்பேன். நாளிதழ்களை அனைவரும் படிப்பதற்காக இளைஞர்களுடன் இணைந்து நுாலகத்தை ஏற்படுத்தினேன். கட்டட வசதி இல்லாததால் விரிவுபடுத்த முடியவில்லை,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-ஜூலை-201804:58:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் லோக்கல் எம்.எல்.ஏ பாஸ்கரன், அதிமுக க்கு தெரிஞ்சா இதை மினி பாராக மாற்றி விடுவார்.
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
08-ஜூலை-201810:29:57 IST Report Abuse
சுந்தரம் புத்தகங்களை உள்ளே பத்திரமாக வைக்கலாம். படிப்பவர்கள் வசதிக்கு வெளியே குறைந்த செலவில் கொட்டகை அமைக்கலாம். வீணாக கடன் வாங்கி செலவுகளை தவிர்க்கலாம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஜூலை-201809:24:32 IST Report Abuse
Bhaskaran அப்பகுதியை சேர்ந்த செல்வந்தர்கள் கட்டிடம் கட்ட உதவலாமே கோவில் கட்டுவதைவிட நூலகம் கட்டுவது எவ்வளவோ ஏற்புடைய காரியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X