ராமநாதபுரம், பிளஸ் 2 முடித்த பள்ளியிலேயே, மாணவர்கள் ஜூலை 16 முதல் 30 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யலாம், என கலெக்டர் நடராஜன் அறிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பது:வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க 2011 முதல் நேரடியாக வேலைவாய்ப்புத்துறையின் https//tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற வழி செய்யப்பட்டது. தற்போது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 16ல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.இதையடுத்து, அன்று முதல் ஜூலை 30 வரை ஒரே பதிவு மூப்பு தேதியில் மாணவர்கள் தங்களின் பிளஸ் 2 கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். அவர்கள் படித்த பள்ளியிலேயே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., மாணவர்களும் இதே முறையில், இணையதளம் வழியாக பதிவு செய்யலாம்.ஏற்கனவே பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்திருந்தால், வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும், நாளில் தாங்கள் படித்த பள்ளியில் பிளஸ் 2 கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு பதிவு மூப்பில் பதிவு செய்யலாம். புதிதாக பதிவோர் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, ஜாதி சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE