ராமேஸ்வரம், ராமேஸ்வரத்தில் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 1.50 லட்சம் மோசடி செய்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.ராமேஸ்வரம் மார்க்கெட் தெருவைச் சேர்ந்த தமிழரசி,41, முனீஸ்வரி,39.சகோதரிகளான இருவரும், அதே தெருவை சேர்ந்த சித்ராவுக்கு, சத்துணவுதிட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 1.50 லட்சம் வாங்கி உள்ளனர்.சத்துணவு திட்டத்தில் வேலை கிடைக்காததால் சித்ரா சகோதரிகளிடம் பணத்தை கேட்டுள்ளார்.பணத்தை கொடுக்காமல் இருவரும் இழுத்தடித்தனர்.வேதனையடைந்த சித்ரா, ராமேஸ்வரம் கோயில் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிந்து தமிழரசி, முனீஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE