திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி - சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதுமைப்பள்ளி விருது மற்றும் கனவு ஆசிரியர் விருது கிடைத்துள்ளது.கோவை, பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லுாரியில் நடந்த விழாவில், தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடமிருந்து, தலைமை ஆசிரியர் காளியப்பன் விருது பெற்று கொண்டார்.கனவு ஆசிரியர் நேசமணிக்கு சான்றிதழ் மற்றும் 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE