மகுடஞ்சாவடி: முறையற்ற குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி தொடங்கியது. காவிரி குழாய்களில், பலர் முறைகேடு இணைப்பு பெற்று, மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதாக புகார் எழுந்தது. இதனால், அந்தந்த பகுதிகளில், தாசில்தார் தலைமையில் பறக்கும் படை அமைத்து, முறையற்ற இணைப்பு துண்டிக்கும் பணி நடக்கிறது. அதன்படி, மகுடஞ்சாவடியில், 14, கூடலூரில் ஏழு, அ.புதூரில், 28, அ.தாழையூரில், 2, வைகுந்தத்தில், 11, காளிகவுண்டம்பாளையத்தில் மூன்று என, 65 பேர், முறையற்ற குடிநீர் இணைப்பு பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், நேற்று, மகுடஞ்சாவடி, ஜெயபுரி வீதியிலிருந்து, அந்த இணைப்பு துண்டிக்கும் பணியில், பறக்கும் படையினர் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE