ஈரோடு: விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கான நேர்காணலில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் பெற, விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் பயனாளிகளை தேர்வு செய்ய, ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேர்காணல் நேற்று நடந்தது. இதில், 180க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயனாளிகளை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், ஆர்.டி.ஓ., பிசியோ தெரபி மருத்துவர் உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE