புதுடில்லி : ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, நூறு கோடி முறை முயன்றாலும் யாராலும் ஆதார் பயோ மெட்ரிக் தகவல்களை திருட முடியாது என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட அவர், ஐடி கொள்கையை வெளியிட தமது பாக்கெட்டில் வைத்திருந்த ஆதார் தகவல் அடையாள அட்டையைப் பயன்படுத்தினார். இந்த ஆதார் ஆவணத்தில் தமது புகைப்படம், பாட்னாவின் நிரந்தர முகவரி , கைரேகை போன்ற தகவல்கள் இருப்பதாகவும் தவறாகப் பயன்படுத்த உதவக்கூடிய மத அடையாளம், வருமானம் போன்ற தனி நபர் தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதனை திருட ஒரு கோடி அல்ல, நூறு கோடி முறைகூட முயன்று பார்க்கலாம் என்றும் அவர் சவால் விடுத்தார். ஆதார் முழுமையான அளவில் பாதுகாப்பானது என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement