வால்பாறை:வால்பாறையில் அ.தி.மு.க., நகர செயலாளர் மயில்கணேஷ்; தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் அமீது இருவரும் சில ஆண்டுகளாக தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தனர்.கட்சி நிகழ்ச்சி, அரசு விழாக்களிலும் கோஷ்டிகளாக செயல்பட்டு, எதிரெதிர் துருவங்களாக இருந்தனர். இதனால், கட்சி தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், இரு கோஷ்டியினரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி ஆகியோர் முன்னிலையில் சமரச பேச்சு நடந்தது. தனி கோஷ்டியாக செயல்படுவதை தவிர்த்து, ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து, வால்பாறையில் அ.தி.மு.க.,வின் இரு கோஷ்டிகளும் ஒருங்கிணைந்து செயல்பட துவங்கியுள்ளனர். இதனால், கட்சியினர் நிம்மதியடைந்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement