புதுடில்லி: அசாமில் என்.ஆர்.சி. வெளியிடப்பட்டதையடுத்து பக்கத்து மாநிலங்களான மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி. கொண்டுவர வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அசாமில் கடந்த 30-ம் தேதி சட்டவிரோத வங்கதேசத்தினரை கண்டறிய என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் வரை பட்டியல் வெளியானது. இதன் மூலம் 40 பேர் லட்சம் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் பக்கத்து மாநிலங்களான மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி.யை கொண்டுவர வலியுறுத்தப்பட்டது. திரிபுராவில் ஐ.என்.பி.டி. , ஐ.பி.எப்.டி. போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேகாலயாவில் கே. எஸ்.யு எனப்படும் காஸி மாணவர் அமைப்பினர் என்.ஆர்.சி.யை கொண்டு வர வலியுறுத்தி பிரசாரம் செய்ய துவங்கியுள்ளனர்.
இதற்கிடையே மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் கே.எஸ்.யு அமைப்பினர் சோதனை சாவடி அமைத்து வங்கதேசத்தினர் ஊடுருவலை கண்காணித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement