யானைக்காக நிறுத்தப்பட்ட அணை

Added : ஆக 14, 2018 | கருத்துகள் (39) | |
Advertisement
திருச்சூர்: கேரளாவில், கன மழை மற்றும் பெரும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது ஒரு புறம் இருக்க, காட்டு யானை ஒன்று கடந்து செல்வதற்காக அணை மதகுகளை மூடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் ஓடுவது சாலுக்குடி ஆறு. இதன் குறுக்கே பெருங்கல்குத்து அணை கட்டப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால், ஆக., 9ம் தேதி அணையின் மதகுகள்
யானைக்காக நிறுத்தப்பட்ட அணை

திருச்சூர்: கேரளாவில், கன மழை மற்றும் பெரும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது ஒரு புறம் இருக்க, காட்டு யானை ஒன்று கடந்து செல்வதற்காக அணை மதகுகளை மூடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.



கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் ஓடுவது சாலுக்குடி ஆறு. இதன் குறுக்கே பெருங்கல்குத்து அணை கட்டப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால், ஆக., 9ம் தேதி அணையின் மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.


ஆக., 12ம் தேதி சார்பா மற்றும் இடானி ஆகிய இடங்களுக்கு இடையே காட்டுப்பகுதியில் யானை ஒன்று ஆற்றை கடக்க முடியாமல் பாறைகள் மீது நின்றிருப்பதை வனத்துறை ஊழியர்கள் கண்டனர். அவர்கள் அணை பராமரிப்பு ஊழியர்களை தொடர்பு கொண்டு அணை மதகுகளை மூட கோரினர். மதகுகள் மூடப்பட்டு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நான்கு மணி நேரம் காத்திருந்த பிறகு, காலை 11 மணி அளவில் ஆற்றில் நீர் ஓட்டம் குறைந்தது. யானையும் அப்பகுதியை கடந்து சென்றது. இதன் பிறகே அணையின் மூன்று மதகுகளும் மீண்டும் திறக்கப்பட்டன.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (39)

Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
15-ஆக-201800:14:06 IST Report Abuse
Mannai Radha Krishnan மனிதாபிமானத்தை கடந்த மிருகாபிமானம்...... வாழ்க வனத்துறையினர்
Rate this:
Cancel
K.Ayyappan - Chennai,இந்தியா
14-ஆக-201821:14:15 IST Report Abuse
K.Ayyappan நன்றி. கேரளம் இது போன்று மழை மற்றும் வெள்ளப் பிரச்சினைகளிலிருந்து மீள கடவுளை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
14-ஆக-201821:10:48 IST Report Abuse
Arivu Nambi இதில் பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை . விலங்குகளின் வாழ்விடத்தை எல்லாவகையிலும் சீரழித்துவிட்டு அதை செய்தேன் இதை செய்தேன் என்று பெருமையா ? உண்மையில் வனத்துறை ஊழியர்கள் தங்களின் பணியை செய்துள்ளனர் ...அவளவுதான் ....
Rate this:
jagan - Chennai,இலங்கை
14-ஆக-201821:22:06 IST Report Abuse
jaganதமிழ் நாட்டில் கரண்டு வெச்சு கொள்வோம் என்று அண்ணன் அறிவு சொல்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X