சிவகங்கை;தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நிர்மலா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ்கண்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அரசு அலுவலர்களை பாதிக்கும் அரசாணைகள் குறித்தும், சங்கத்திற்கு மாவட்ட தேர்தல் நடத்துவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முக ராஜன், முன்னாள் மாநில பொதுச்செயலாளர் பொன்னுப்பாண்டி, முன்னாள் தலைவர் அன்பழகன், சிங்கார வேலன், பாண்டி, கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.