தல்சேர்:''அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், 'முத்தலாக்' நடைமுறை, சட்ட விரோதமாகி விட்டது. இதன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டு உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கும், ஒடிசா மாநிலத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்றார். இங்குள்ள தல்சேர் நகரில், ௧௩ ஆயிரம் கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுளள, நிலக்கரி வாயு மூலம், உரம் தயாரிப்பு தொழிற்
சாலையை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:
நாட்டில், ஏழை மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான சுகாதார காப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், பல மாநிலங்கள் இணைந்துள்ளன. ஆனால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இந்த திட்டத்தில் சேர மறுக்கிறார். இதன் மூலம், ஏழை மக்களின் நலனில், தனக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவுபடுத்திஉள்ளார்.
புரி ஜகன்னாதர் கோவில், ஒடிசாவின் அடையாளமாக இருந்தது மாறி போய்விட்டது. இப்போது, மக்கள் நலப் பணிகளுக்கு கூட, கமிஷன் வழங்க வேண்டும் என்பதே,
ஒடிசாவின் அடையாளமாக உள்ளது. இதனால், மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு
பேசினர்.பின், ஜர்குடாவில், புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை
திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:
மக்கள் நலப் பணிகளுக்காக, மத்திய அரசு ஒதுக் கும், 1 ரூபாயில், ௧௫ பைசா மட்டுமே, மக்களை சென்றடைகிறது என, முன்னாள் பிரதமர்ராஜிவ் கூறினார்.ஆனால், இப்போது, பயனாளி களின் வங்கிக் கணக்கில், பணத்தை நேரடியாக செலுத்தும் திட்டத்தால், நலத்திட்டங் களை செயல்படுத்துவ தில், மூன்றாவது நபர் தலையீடு இல்லை. மத்திய அரசு, மக்களுக்காக ஒதுக்கும் ஒரு ரூபாயில், 100 பைசாவும் மக்களை சென்றடைகிறது.
முத்தலாக் நடைமுறையால், முஸ்லிம் பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். வெறும் ஓட்டுக் காக மட்டுமே, சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ள தாக, காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நடிக் கின்றன. அதனால் தான், முத்தலாக் மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தினர். எனினும், மூன்று நாட்களுக்கு முன் அமல்படுத்தப் பட்ட அவசர சட்டத்தால், முத்தலாக், சட்ட விரோதமாகியுள்ளது.முஸ்லிம் பெண்களுக்கு, பல ஆண்டுகளுக்கு பின், நீதி கிடைத்துள்ளது.
மத்தியில், காங்., தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல தொழிற் சாலைகள் மூடப்பட்டன. மத்தியில் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றபின், மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க, நடவடிக்கை எடுத்தோம். மக்களுக்கு பொருளாதார நீதி மட்டு மின்றி, சமூக நீதியும் வழங்க,
அரசு கடமைப்பட்டு உள்ளது. 2022ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு கட்டி தரும்
திட்டம், முழுமையாக நிறைவேற்றப் பட்டிருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி
பேசினார்.
'சத்தீஸ்கரில் நிலையான அரசு'
''நிலையான அரசை தேர்வு
செய்வதில், சத்தீஸ்கர்
மக்கள் எப்போதும்முதிர்ச்சியுடன்
செயல் படுகின்றனர், '' என,பிரதமர் மோடி கூறினார். சத்தீஸ்கரில், விரைவில்
சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, ஜன்ஜ்கிர் - சம்பாவில் நடந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
சிறு மாநிலங்களில், நிலையான அரசு இருக்காது என்ற கூற்றை, சத்தீஸ்கர் மக்கள் பொய்யாக்கி விட்டனர். சத்தீஸ்கரில், 15 ஆண்டுகளாக, ரமண் சிங் தலைமையில், நிலையான ஆட்சி நடந்து வருகிறது. நிலை யான அரசை தேர்வு செய்வதில், சத்தீஸ்கர் மக்கள் முதிர்ச்சியுடன் செயல் படுகின்னறர்.
நக்சல் வன்முறை, வெடிகுண்டு தாக்குதல் போன்ற கடும் சவால்களை எதிர்கொண்டு, மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை, ரமண் சிங் வழங்கி வருகிறார். வளர்ச்சியடைந்து வரும் மாநிலங்களின் பட்டியலில், சத்தீஸ்கரும் இப்போது இடம் பெற்றுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், எந்த திட்டத்தையும், மத்திய அரசு செயல்படுத்து வதில்லை. மக்கள் நலன் கருதியே, திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றன. சத்தீஸ்கரில், பா.ஜ.,வுக்கே மக்கள் தொடர்ந்து வாய்ப்பளிப்பர்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (17)
Reply
Reply
Reply