திருவாரூர் : ''திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில், நான் போட்டியிட வேண்டும் என, பலர் கூறி வருகின்றனர். இடைத்தேர்தலில், ஓட்டு கேட்பேனோ, இல்லையோ; எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, மக்களிடம் நியாயம் கேட்பேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.
மறைந்த, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு, திருவாரூரில் புகழஞ்சலி கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான அழகிரி பங்கேற்று, பேசியதாவது:
திருவாரூரில் தான் பிறந்தேன். சிறு வயதில்,
இந்த பகுதியில் விளையாடிய நினைவுகள், தற்போது ஞாபகம் வருகின்றன. அண்ணன் முத்து மற்றும் குடும்பத்தினரோடு, திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்ததை, நினைத்து பார்க்கிறேன்.
அன்பு கட்டளை
கருணாநிதியுடன், 2011ல், தேர்தல் பிரசாரத்தின் போது, திருவாரூருக்கு வந்தேன். தந்தை இறந்த
பின், தற்போது தான் வந்திருக்கிறேன். திருவாரூர் இடைத்தேர்தலில், நான் போட்டியிட வேண்டும் என, பலர் கூறி வருகின்றனர்; சிலர், அன்பு கட்டளை இடுகின்றனர்.அவர்களிடம், தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்வோம் என, கூறியுள்ளேன். ஏனெனில், இடைத்தேர்தலே வேண்டாம் என, மேலிடத்துக்கு, சிலர் கூறி வருவதாக தகவல்கள் வருகின்றன.
இடைத்தேர்தல் நடந்து,நான் போட்டியிட்டால், தேர்தல் ஆணையம் நிர்ண யித்துள்ள தொகையை கூட செலவு
செய்யாமல், நான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இடைத்தேர்தலில் ஓட்டு கேட்பேனோ,
இல்லையோ; எனக்கு இழைக்கப்பட்ட
அநீதிக்கு, மக்களிடம் நியாயம் கேட்பேன். இவ்வாறுஅவர் பேசினார்.
பின், அழகிரி அளித்த பேட்டி: தனி கட்சி துவங்கும் எண்ணமில்லை. கருணாநிதி வழியை பின்பற்றி, எதிர்காலத்தில் நடப்போம். ரஜினி, பா.ஜ., மற்றும் என்னை இணைத்து வரும் அரசியல் தொடர்பான செய்திகள் எல்லாம் வெறும் வதந்திகள்.
ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என, பல முறை கூறிவிட்டேன். அவர் களிடம் இருந்து, எந்த பதிலும் இல்லை. தமிழ கத்தில் அரசியலும் சரியில்லை; ஆட்சியும் சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (44)
Reply
Reply
Reply