சொந்த செலவில் 22 முதியவர்களை விமானத்தில் அழைத்து சென்ற விமானி

Added : அக் 08, 2018 | கருத்துகள் (6) | |
Advertisement
ஹிசார் : ஹரியானா மாநில கிராமத்தை சேர்ந்த, 70 வயதுக்கு மேற்பட்ட, 22 முதியவர்களை, விமானி ஒருவர், தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றதை, கிராம மக்கள் பாராட்டிஉள்ளனர்.ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டம், சாரங்பூர் கிராமத்தை சேர்ந்தவர், விகாஸ் ஜியானி, 22. தான் விமானியானால், கிராமத்தில் உள்ள முதியவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக, சிறுவயதில், விகாஸ் ஜியானி
விகாஸ் ஜியானி, இண்டிகோ விமானி,சாரங்பூர் கிராமம்,  விமானி,  ஹரியானா , கிராம மக்கள்,    பஞ்சாப் , அமிர்தசரஸ், பொற்கோவில், Vikas Giani, Indigo Pilot, Sarangpur Village, Pilot, Haryana, Village People, Punjab, Amritsar,

ஹிசார் : ஹரியானா மாநில கிராமத்தை சேர்ந்த, 70 வயதுக்கு மேற்பட்ட, 22 முதியவர்களை, விமானி ஒருவர், தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றதை, கிராம மக்கள் பாராட்டிஉள்ளனர்.



ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டம், சாரங்பூர் கிராமத்தை சேர்ந்தவர், விகாஸ் ஜியானி, 22. தான் விமானியானால், கிராமத்தில் உள்ள முதியவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக, சிறுவயதில், விகாஸ் ஜியானி கூறியிருந்தார். சமீபத்தில், விமான பயிற்சி முடித்த விகாஸ், 'இண்டிகோ' நிறுவனத்தில், விமானியாக சேர்ந்தார்.



இதையடுத்து, சாரங்பூர் கிராமத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட, 22 தாத்தா, பாட்டிகளை, தன் சொந்த செலவில், டில்லியில் இருந்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு, 'இண்டிகோ' விமானத்தில் அழைத்துச் சென்றார். மேலும், அமிர்தசரசில் உள்ள பொற்கோவில், ஜாலியன் வாலாபாக் மற்றும் வாகா எல்லையில் ராணுவத்தினரின் அணி வகுப்பை பார்ப்பதற்கும், அவர்களை அழைத்துச் சென்றார். அவரது இந்த செயலை, கிராம மக்கள் பாராட்டினர்.



இது வரை விமானத்தை அருகில் பார்த்திராத, முதியவர்களில் ஒருவரான அமர்சிங் கூறியதாவது: சிறு வயதில் கூறுவதை, பெரும்பாலோர் நிறைவேற்றுவதில்லை. ஆனால், விகாஸ், எங்களை விமானத்தில் அழைத்துச் சென்றதுடன், பல இடங்களை சுற்றி காண்பித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Abraham David - Tuticorin ,இந்தியா
10-அக்-201812:42:20 IST Report Abuse
Abraham David விகாஸ் என்றால் வளர்ச்சி. உண்மையில் அவர் கிராமம் வளர இவரும் ஒரு காரணம்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-அக்-201810:50:04 IST Report Abuse
Natarajan Ramanathan இந்தியாவில் இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்....
Rate this:
Cancel
09-அக்-201809:14:19 IST Report Abuse
ருத்ரா சொன்னதை நிறைவேற்றுபவர்கள் மிகச்சிலரே. பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X