பெங்களூரு : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர்திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 13,000 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 12,000 கனஅடியில் இருந்து 27,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,042 கனஅடியில் இருந்து 23,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 103.37 அடியாகவும், நீர்இருப்பு 69.27 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்த டெல்டா பாசனத்திற்காக 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE