பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு

Added : டிச 05, 2018 | கருத்துகள் (10) | |
Advertisement
ஈரோடு: வயது முதிர்ந்த தாயை, பஸ் ஸ்டாண்டில், மகன் பரிதவிக்க விட்டு சென்றான்.ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில், இரண்டு நாட்களாக, மூதாட்டி ஒருவர், படுத்து கிடந்தார். போலீசார் விசாரித்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்த, குமாரசாமி மனைவி, பழனியம்மாள், 70, என, தெரிந்தது.பழனியம்மாள் அழுதபடி, போலீசாரிடம் கூறியதாவது:கணவர் இறந்த நிலையில், மகன்
 பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு

ஈரோடு: வயது முதிர்ந்த தாயை, பஸ் ஸ்டாண்டில், மகன் பரிதவிக்க விட்டு சென்றான்.ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில், இரண்டு நாட்களாக, மூதாட்டி ஒருவர், படுத்து கிடந்தார். போலீசார் விசாரித்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்த, குமாரசாமி மனைவி, பழனியம்மாள், 70, என, தெரிந்தது.பழனியம்மாள் அழுதபடி, போலீசாரிடம் கூறியதாவது:கணவர் இறந்த நிலையில், மகன் அர்ஜுனன், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பண்ணாரி அருகேயுள்ள, முதியோர் இல்லத்தில் சேர்த்தான். சில நாட்களாக, உடல்நிலை சரியில்லாமல், சாப்பிட முடியவில்லை. முதியோர் இல்ல நிர்வாகிகள், மகனுக்கு தகவல் தெரிவித்தனர். ஞாயிறு அன்று, மகன், வீட்டுக்கு அழைத்து செல்வதாகக் கூறி, இங்கு விட்டு சென்று விட்டான்.இவ்வாறு மூதாட்டி கூறினார்.'மகன் வீட்டுக்கு செல்கிறீர்களா...' என, கேட்ட போது, மறுத்த மூதாட்டி, மீண்டும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும்படி, கூறினார். பஸ் ஸ்டாண்டில், டீ கடை நடத்தி வரும் கோபால் என்பவர், பழனியம்மாளை, பண்ணாரி அருகேயுள்ள, முதியோர் இல்லத்தில், நேற்று மதியம் சேர்த்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (10)

Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
08-டிச-201805:15:16 IST Report Abuse
Thalaivar Rasigan எதற்காக இந்த உலகத்திற்கு வந்தோம். என்ன சாதித்து விட்டு செல்வோம். முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்ய வேண்டும். தாயை கூட பார்த்து கொள்ளாதவன் பிணத்திற்கு சமம். இவன் எப்படி மனிதனாக மற்றவர்க்கு உதவி செய்வான்.
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
07-டிச-201818:46:35 IST Report Abuse
chander கருணை இல்லங்களில் கருணை இருக்கும் பொருள் இருக்காது இங்க உள்ளவனும் உதவி செய்யமாட்டான் அடுத்தவன் உதவி செய்தாலும் செய்ய விடமாட்டான்
Rate this:
Cancel
Karthick Ajjan - Ooty,இந்தியா
07-டிச-201814:25:45 IST Report Abuse
Karthick Ajjan இந்த மாதிரி ஊருல நிறைய பேரு இருக்காய்ங்க ..அவனோட போட்டோ மட்டும் போடுங்க அப்பத்தா மத்தவனுக்கு எல்லாம் இப்படி பண்ண தோணாது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X