வதோதரா, குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள,நாட்டின் முதல் ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்தை, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், மாநில முதல்வர், விஜய் ரூபானி ஆகியோர், நாட்டுக்கு இன்றுஅர்ப்பணிக்க உள்ளனர்.குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சர்வதேச அளவில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தான், ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் அமைந்துள்ளன.நம் நாட்டிலும், ரயில்வே மற்றும் போக்கு வரத்து பல்கலையை நிறுவ, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்தது.இதன்படி, குஜராத் மாநிலத்தின், வதோதரா மாவட்டத்தில், நாட்டின் முதல், தேசிய ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த பல்கலையில், 20 மாநிலங்களைச் சேர்ந்த, 17 மாணவியர் உட்பட, 103 மாணவர்கள், இளங்கலை பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர்.மேலும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், முதுகலை பட்டப்படிப்புகளை துவங்கவும், பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.இந்நிலையில், இன்று நடக்கும் நிகழ்ச்சியில், வதோதராவில் கட்டப்பட்டுள்ள, தேசிய ரயில்வே மற்றும் போக்கு வரத்து பல்கலை, முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட உள்ளது.இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், குஜராத் மாநில முதல்வர், விஜய் ரூபானி ஆகியோர் பங்கேற்கின் றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE