ஓசூர் : ''ஜெயலலிதா மறைவுக்கு, தி.மு.க., தான் காரணம்,'' என, கூட்டுறவுத்துறை அமைச்சர், ராஜு கூறினார்.
ஓசூரில் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில், 22 ஆயிரத்து, 555 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், 95 சதவீத சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
5 சதவீத சங்கங்கள் மட்டுமே, நீதிமன்றம் சென்றன. அரசியல் சார்பற்ற தேர்தலாக தான், கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கிறது.
அ.தி.மு.க., அரசு, வெளிப்படையாக தேர்தலை நடத்தியுள்ளது. சங்க வளர்ச்சியில் ஈடுபாடுள்ளோரை, கட்சி சார்ப்பற்ற முறையில், வெற்றி பெற வைத்துள்ளோம்.
'ஜெயலலிதா மறைவிற்கு விசாரணை நடத்தப்படும்' என, ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அவருக்கு என்ன அருகதை உள்ளது. தாயை இழந்து, தலைமையை இழந்து இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம், தி.மு.க., தான்.
கர்நாடகாவில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில், நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பின், உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை கொண்டு சென்று, ஜெயலலிதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவர் மறைவிற்கு காரணமாக இருந்தது, தி.மு.க., தான். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (42)
Reply
Reply
Reply