கண்டாச்சிபுரம்:கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை நடந்தது.கெடார் அடுத்த சிறுவாலை கிராமத்தில் உள்ள பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் நேற்று சோமவாரத்தையொட்டி உச்சிகால பூஜை நடந்தது. அதனையொட்டி, காலை 11:30 முதல் மூலவர் பாலேஸ்வரருக்கு, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு அபிேஷகமும் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் வாழைப்பூ கலச பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.