அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி, கேத்தநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர், செல்வராஜ், இவருடைய மகன், நந்தகுமார், 20. இவர் ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்றிரவு 7:00 மணியளவில், சைக்கிளில் போகநாயக்கனூர் சாலையில், கீழ்வாணி நோக்கி சென்றார். வளைவில் திரும்பும் போது, தவறி விழுந்தார். அந்த வழியாக வந்த லாரி ஒன்றின் முன்பக்க சக்கரத்தில் நந்தகுமாரின் தலை சிக்கி நசுங்கியது. சம்பவ இடத்திலேயே மாணவர் பலியானார். தகவலின்படி, ஆப்பக்கூடல் போலீசார் மாணவின் உடலை கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக, அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.