ஆம்பூர்: சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டில், நாய் சிக்கியதால், வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, அபிகிரிப்பட்டரையில், மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டத்தை பார்த்ததாக, விவசாயிகள் கூறினர். இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர், நேற்று முன் தினம் கூண்டு வைத்தனர். பின், வனத்துறையினர் அங்கிருந்து வெளியேறி, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை வனத்துறையினர் வந்த போது, கூண்டுக்குள் நாய் சிக்கி இருந்தது, தெரியவந்தது. இதையடுத்து, நாயை விடுவித்த வனத்துறையினர், மீண்டும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE