பாகூர்:கூலி தொழிலாளி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.கிருமாம்பாக்கம் அடுத்த வண்ணாங்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் 29; கூலித் தொழிலாளி. இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்த ராஜேஷை அவரது மனைவி கண்டித்துள்ளார்.இதனால், கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்த ராஜேஷ், எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE