பழநி:''மேகதாது அணைக்கு மத்திய அரசு ஆதரவு அளிப்பதின் மூலம், தமிழக தண்ணீர் ஆதாரங்களை அழிக்க முயற்சி நடக்கிறது,'' என வைகோ பேசினார்.தி.மு.க., லோக்சபா வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பழநி, திண்டுக்கல்லில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: மத்திய அரசு தமிழகத்திற்கு முல்லைபெரியாறுஅணை, மேகதாதுஅணை பிரச்னை போன்ற விஷயங்களில் துரோகம் செய்துள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் தஞ்சையில் 25 லட்சம் ஏக்கர் தரிசாகிவிடும். காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் இருக்காது. பிரதமர் மோடி கஜாபுயலில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கவில்லை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE