கேரளாவில், உள்ள, காசர்கோடு மாவட்டத்தில், 15 நாட்களுக்கு முன், இதயக் கோளாறுடன், ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு, அருகே உள்ள, கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வேண்டுகோள்
இந்நிலையில், குழந்தைக்கு, 'நிமோனியா' பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தையின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழக்க துவங்கியது. மங்களூரில் போதிய மருத்துவ வசதி இல்லாததால், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதிக்கும்படி, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.ஆனால், பிறந்து, 15 நாட்களே ஆன குழந்தையை, அவ்வளவு துாரம் ஆம்புலன்சில் அழைத்துச் செல்வது, உயிருக்கு ஆபத்தானது என்றும், டாக்டர்கள் எச்சரித்தனர்.
இதையடுத்து, மங்களூரு மருத்துவமனையில் இருந்து, குழந்தையை ஏற்றி, ஆம்புலன்ஸ் புறப்பட்டது. வழி நெடுகிலும், நெரிசல் ஏற்படாத படி, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால்,
திருவனந்தபுரத்தை நோக்கி, மின்னல் வேகத்தில், ஆம்புலன்ஸ் பறந்தது.
தீவிர சிகிச்சை
இதையடுத்து, வழியில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை யில், குழந்தையை
அனுமதிக்கும்படி, கேரள மாநில, சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கூறினார்.
கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில், குழந்தை அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கேரள மாநிலம், மலைப்பாங்கான பகுதி என்பதால், மங்களூரில் இருந்து கொச்சி வரையிலான, 400 கி.மீ., துாரத்தை, சாலை மார்க்க மாக கடக்க, 10 மணி நேரம் ஆகும்.
பாராட்டு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE