சென்னை, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர்கள், நேற்று அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தில் காலியாக உள்ள, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ம் தேதி, தேர்தல் நடக்க உள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், 22ம் தேதி விருப்ப மனு வாங்கப்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்தனர்; அன்று மாலை நேர்காணல் நடந்தது. ஆனால், வேட்பாளர்களை தேர்வு செய்வதில், சிக்கல் ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதியில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், கூட்டுறவு துறைஅமைச்சர் ராஜு, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா ஆகியோர், தங்களின் ஆதரவாளர்களுக்கு, 'சீட்' அளிக்க வேண்டும் என, கட்சி தலைமையை வற்புறுத்தினர்.
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், தன் ஆதரவாளருக்கு, சீட் கொடுக்க விரும்பினார்.
இதனால், வேட்பாளரை தேர்வு செய்வதில், இழுபறி ஏற்பட்டது.அதேபோல, சூலுார்
தொகுதியை, தனக்கு வழங்கும்படி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமிகேட்டார்.ஆனால், அமைச்சர் வேலுமணி, தன் ஆதரவாளரை நிறுத்த முயன்றார். அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்தி, நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதியில், துாத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலர் மோகன்; திருப்பரங்குன்றம் தொகுதியில், அவனியாபுரம் பகுதி செயலர் முனியாண்டி; அரவக்குறிச்சி யில், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலர் செந்தில்நாதன்; சூலுாரில், கோவை புறநகர் மாவட்ட ஜெ., பேரவை தலைவர் கந்தசாமி ஆகியோர், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அனைவரும், நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (10)
Reply
Reply
Reply