திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த ஒட்டம்பட்டில் நடந்த ஆதிகூத்தாண்டவர் திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் ஆதிகூத்தாண்டவர் கோவில் 4ம் ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, கூத்தாண்டவர் தேரோட்டம் நடந்தது. காலை 9:00 மணிக்கு கூத்தாண்டவர் யுத்தகோலத்தில், பெரும் தேர்பவனியில் எழுந்தருளினார். வேண்டுதல் உள்ள பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டனர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, தேரை முக்கிய வீதிகள் வழியாக செண்டை மேளம் முழங்க இழுத்துச் சென்றனர்.மாலை தேர் நிலையை அடைந்தவுடன், களபலி உற்சவம் நடந்தது. இரவு 10:00 மணிக்கு, சுவாமி இந்திர விமானத்தில் காட்டு கோவிலுக்குச் அழைத்துச் செல்லப்பட்டார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வரும் 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் காட்டுகோவிலில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE