குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், அதிகரித்து வரும், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, நலச்சங்க இணைப்பு மையத்தினர், கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லாவரம் நகராட்சியில், தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இங்கு, 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் குறைந்து விட்டதால், ஆழ்துளை கிணறு, கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது.நகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும், லாரி தண்ணீரும், போதுமானதாக இல்லை.
இந்நிலையில், பல்லாவரம் குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையத்தினர், இப்பிரச்னை குறித்து, நகராட்சி கமிஷனரை, சந்தித்து, மனு கொடுத்தனர். கோரிக்கைகளை கேட்ட அதிகாரிகள், தேவைப்படும் இடங்களில், கூடுதல் லாரி தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததோடு, தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE