அபத்தமான குற்றச்சாட்டு!
பா.ஜ.,வின் பேச்சை கேட்டு தேர்தல் ஆணையம் இயங்குவதாக, காங்., கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை; அடிப்படை ஆதாரமற்றவை. பாக்.,கின் பாலகோட்டில் நடந்த விமானப்படை தாக்குதலே போலியானது என கூறியவர்களின் பேச்சை நம்ப, மக்கள் தயாராக இல்லை.
ஜிதேந்திரா சிங்
பிரதமர் அலுவலக இணை அமைச்சர், பா.ஜ.,
ராகுலுக்கு கவனமில்லை!
அமேதி தொகுதி மீது, ராகுல் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது, அத்தொகுதி மக்களுக்கு அவர் கடிதம் எழுதி ஓட்டு கேட்டதில் இருந்தே தெரிகிறது. அத்தொகுதியில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு கூட, அவர் நேரடியாக செல்லவில்லை.
ஸ்மிருதி இரானி
மத்திய ஜவுளித்துறை அமைச்சர், பா.ஜ.,
அறுவை சிகிச்சை தான் வழி!
பாக்., பயங்கரவாதிகளை, ஐ.நா., பட்டியலில் சேர்ப்பதும், துல்லிய தாக்குதல்கள் நடத்துவதும் மட்டுமே, பயங்கரவாதத்தை ஒழித்து விடாது. அதிரடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்.
கபில் சிபல்
மூத்த தலைவர், காங்கிரஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE