நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளத்தை சேர்ந்தவர், அம்பாள், 83. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், லட்சுமணன் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாத அம்பாள், தன் உறவினர் வீட்டருகே குடிசை அமைத்து வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென குடிசை தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும், குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அம்பாளும் தீயில் கருகி இறந்தார்.தகவலறிந்த தென்தாமரைக்குளம் போலீசார், சம்பவ இடத்தில் கருகிய நிலையில் கிடந்த அம்பாளின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து தென்தாமரைகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE