கடலுார்:போதையில், மினி வேனை ஓட்டிச் சென்ற டிரைவர் ஏற்படுத்திய விபத்தில், 40 பேர் படுகாயம் அடைந்தனர்.புதுச்சேரி மாநிலம், அழகியநத்தம் பகுதியைச் சேர்ந்த, 40 பேர், ரெட்டிச்சாவடி அடுத்த பரிக்கல்பட்டில், துக்க நிகழ்ச்சிக்கு, 'டாடா ஏஸ்' வாகனத்தில், நேற்று காலை சென்றனர்.
வாகனத்தை, சிவராஜ் என்பவர் ஓட்டினார். வேகமாக ஓட்டிச் சென்ற அவர், குருவிநத்தம் சித்தேரி அருகே, திடீரென பிரேக் அடித்தார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை யோர பள்ளத்தில் கவிழ்ந்தது.உடன், டிரைவர் தப்பியோடி விட்டார். அருகில் இருந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்தில், 40 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில், 15 பேர் எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயம் அடைந்துள்ளனர். போலீஸ் விசாரணையில், டிரைவர் சிவராஜ், மது போதையில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. அவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE