கம்பம் : 'விவசாயிகள் 'பாலி ஹவுஸ்' அமைத்து பயிர் சாகுபடியில் ஈடுபட முன்வர வேண்டும்,' என, தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கென சதுர மீட்டருக்கு ரூ. 435 மானியம் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.
தோட்டக்கலைத்துறையில் அதிக மகசூல், குறைவான தண்ணீர், குறைந்த பரப்பில் சாகுபடி செய்ய அறிமுகம் செய்யப்பட்டதுதான் 'பாலி ஹவுஸ்' திட்டம். ஒரு விவசாயி குறைந்தது 2 ஆயிரம் சதுரமீட்டரில் ( ஒரு ஏக்கர்) 'பாலி ஹவுஸ்' அமைக்கலாம். அதில் சொட்டுநீர் பாசனம் அல்லது தெளிப்புநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சலாம், வெள்ளரி, குடமிளகாய், கொத்தமல்லி, காய்கறி பயிர்கள் மற்றும் மல்லிகை பூ உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யலாம். அதிக மகசூல், நல்ல பயன் கிடைக்கும்.
மானியம்தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், 'பாலி ஹவுஸ்' அமைக்கமாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களுக்கு 24 ஆயிரம் சதுரமீட்டர் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 ஆயிரம் சதுரமீட்டர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஆயிரம் சதுரமீட்டருக்கு மானியம் வழங்கலாம். ஒரு சதுரமீட்டருக்கு ரூ. 435 மானியம் தரப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை உதவிஇயக்குநர் அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம், 'என்றனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE