புதுடில்லி ; பிரதமர் நரேந்திரமோடியை, ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி இன்று டில்லியில் சந்தித்தார். அப்போது, தனது பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தருமாறு மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 353 இடங்களில் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளார் பிரதமர் மோடி. அதேபோல், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.., காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்தநிலையில், பிரதமர் மோடியை சந்தித்து வெற்றிக்கு வாழ்த்து கூறிய ஜெகன்மோகன் ரெட்டி, தனது பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தருமாறு மோடிக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE