காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி
காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி

காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி

Added : மே 27, 2019 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை:ஆந்திராவில் பாயும் கோதாவரி ஆற்றின் வழியாக ஆண்டு தோறும் 1100 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. காவிரியுடன் கோதாவரி நதியை இணைத்தால் வீணாகும் நீரை தடுத்து வறட்சி மாநிலங்களில் பயன்படுத்தலாம்.இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மத்திய நீர் வளத்துறையும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மத்திய
 காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி

சென்னை:ஆந்திராவில் பாயும் கோதாவரி ஆற்றின் வழியாக ஆண்டு தோறும் 1100 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. காவிரியுடன் கோதாவரி நதியை இணைத்தால் வீணாகும் நீரை தடுத்து வறட்சி மாநிலங்களில் பயன்படுத்தலாம்.

இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மத்திய நீர் வளத்துறையும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நீர் வளத்துறை காத்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்நிலையில் 'காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதே என் முதல் பணி' என மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு:காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளதற்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டம் இந்த நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் தமிழகத்தில் பரவலாக நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (18)

Jegan Nicholas - Tirunelveli,இந்தியா
27-மே-201916:58:12 IST Report Abuse
Jegan Nicholas காவிரியில் வீணாகும் நீரை என்ன செய்ய போகிறீர்கள் தெய்வமே, நீங்கள் ஒரு MP வைத்து கொண்டு என்ன செய்ய போகிறீர்கள். திருடர்கள் முன்னேற்றக் கழகம் இந்த விஷயத்தில் பாராளுமன்றத்தில் வெளிநடப்பு மட்டுமே செய்யும் .
Rate this:
Cancel
CS CBE - Coimbatore,இந்தியா
27-மே-201912:43:52 IST Report Abuse
CS CBE மத்திய அமைச்சர் சொன்னால் இது நடந்து விடுமா? இதில் சம்பந்தப் பட்ட மற்ற மாநிலங்கள் என்ன சொல்கின்றன? முக்கியமாக, கர்நாடகாவும் ஆந்திராவும்? சத்தியமாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நதி நீர் இணைப்பு என்பது ஒரு அரசியல் ஏமாற்று வேலை. மேலும், தமிழக அறிவாளிகள், ஒன்றுக்கும் உதவாத திருடர்கள் முன்னேற்றக் கழகத்தை பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார். வேலை நடந்த மாதிரிதான்.
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
27-மே-201913:37:40 IST Report Abuse
THENNAVANஅன்னே கோதாவரி ஆறு மும்பைக்கு சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறது ,அதாவது மகாராஷ்டிராவிலிருந்து அதனால தெலுங்கானா ஆந்திர எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்க வழியே இல்லை ,கட்கரி மும்பைக்காரர் அதனால அவரால் முடியும் ,நாம தமிழர்கள் செய்வது என்னென்ன மத்திய அரசு கேட்க்கும் நிலங்களை நீர் கொண்டுவர தாமதம் இல்லாமல் கொடுத்தாலே போதும் .மோடி எப்போதும் நடக்கும் திட்ட்ங்களை மட்டுமே தொடங்குவார் அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார் ,வீராணம் போல கொள்ளை அடிக்கவே தொடங்கி அதை மூடிவிடமாடடார்....
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
27-மே-201920:00:47 IST Report Abuse
pradeesh parthasarathy...
Rate this:
Cancel
mukundan - chennai,இந்தியா
27-மே-201912:17:53 IST Report Abuse
mukundan கோதாவரி மற்றும் காவிரியை இணைக்க வேண்டும் என்றால், கால்வாய் வெட்ட வேண்டும், அதற்கு விலை நிலங்கள் கையக படுத்த பட வேண்டும், இதை நமது சந்தர்ப்பவாத திராவிட கட்சிகள் மற்றும் psycho + sorimaan போன்றோர் ஒத்துக்கொள்வார்களா?
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
27-மே-201913:41:28 IST Report Abuse
THENNAVANஅன்னே இந்த திடடம் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டுவரும் திடடம் இல்லை , ஒரு பஸ் உள்ளே செல்லும் அளவில் உள்ள இரும்பு குழாய் வழியாக தண்ணீர் கொண்டு வரும் திடடம் 60000 கோடிகள் திட்டம் பணம் அனைத்தும் மத்திய அரசு உலக வங்கியில் கடன் வாங்கி நிறைவேற்ற முடிவு செய்துவிட்டார்கள் ,அதனால தமிழகம் அதற்கான நீர் வரிகளை ஒழுங்காக கட்டி பயன்படுத்திக்கொண்டாலே போதும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X