புதுடில்லி: முதல் பெண் மத்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமை பெற்ற நிர்மலா சீதாராமன், இன்று( மே 31) மத்திய நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்று கொண்டார். இதன் மூலம் இந்த பதவிக்கு வரும் முதல் பெண் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த பெண்ணின் சாதனை பெருமை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் முழுநேர பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பெண் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்தது.
பிரதமர் மோடியின் 2வது அரசிலும் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று அவர் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்று கொண்டார். இதன் மூலம் முழு நேர நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.
மேலும், தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் மத்திய நிதி அமைச்சர் ஆவது இது முதல்முறை. தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் இந்த பதவிக்கு வருவது பெருமை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE