மாணவர்கள் பலாத்காரம்: மதரசா ஆசிரியர் கைது

Added : ஜூன் 02, 2019 | கருத்துகள் (4) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில், மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த மதரசா ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஆலுவா மாவட்டத்தை சேர்ந்தவன், யூசுப், 63. கோட்டயம் மாவட்டம், தலயோபரம்பு நகரில் உள்ள மசூதி சார்பில் நடத்தப்படும், மதரசா பள்ளியில் ஆசிரியராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி
மாணவர்கள் பலாத்காரம்: மதரசா ஆசிரியர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில், மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த மதரசா ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஆலுவா மாவட்டத்தை சேர்ந்தவன், யூசுப், 63. கோட்டயம் மாவட்டம், தலயோபரம்பு நகரில் உள்ள மசூதி சார்பில் நடத்தப்படும், மதரசா பள்ளியில் ஆசிரியராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தான். மதரசாவில், 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், மதரசாவில் படிக்கும், 12 வயது மாணவர், தன்னிடம் யூசுப் முறைகேடாக நடந்து கொண்டதாக, பெற்றொரிடம் புகார் செய்தார். பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.



விசாரணையில், யூசுப், கடந்த இரண்டு ஆண்டுகளில், 19 மாணவர்களை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, யூசுப்பை போலீசார் கைது செய்தனர்.அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியத்தை சேர்ந்த, ஷைஸ்டா அம்பர் கூறியதாவது:இது போன்ற பலாத்கார வழக்குகளில், குற்றவாளியை, பலர் முன்னிலையில், தண்டிக்க வேண்டும் என, இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தவறு செய்தால், தண்டனை மிக கடுமையாக இருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

KSK - Coimbatore,இந்தியா
05-ஜூன்-201908:46:42 IST Report Abuse
KSK இவருக்கு மதரசா முறைப்படி தக்க கடுமையான தண்டனை தந்தால் தான் அந்த அல்லா கூட சந்தோசப்படுவார். ஆனால் போலி மதசார்பின்மை இவரை காப்பாற்றிவிடும் என்று நம்பலாம்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
03-ஜூன்-201913:42:31 IST Report Abuse
Cheran Perumal ராகுலிடமிருந்து இவரை விடுவிக்கக்கோரி போன் வரும்.
Rate this:
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
03-ஜூன்-201912:18:43 IST Report Abuse
Krishnamoorthi A N புண்ணியவான்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள்? இப்போது வந்து கூவுவதுதானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X