சென்னை: 'பிளஸ் 2 வகுப்புக்கான, தமிழ் புத்தகத்தின் அட்டையில், பாரதியாரின் வெள்ளை தலைப்பாகைக்கு பதிலாக, காவி நிறa தலைப்பாகை வரைந்திருப்பது, கண்டனத்துக்குரியது' என, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
பாரதியார் தலைப்பாகையை காவி நிறத்தில் வரைந்திருப்பது, இயல்பாக நடந்ததாக தெரியவில்லை; திட்டமிட்டே வரைந்துள்ளனர். அட்டையில் தான் இந்த மாற்றமா அல்லது உள்ளே இருக்கிற பொருட்களிலும் மறைமுக காவி திணிப்பு இருக்கிறதா என்பதை, கல்வியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
மத்திய அரசு பள்ளிகளில், பாடத்திட்டங்களை மாற்றி எழுதி வருகின்றனர். இந்திய விடுதலை போராட்ட வரலாறை திருத்தி எழுதி வருகின்றனர். பன்முக தன்மையை அழித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற நிலைமையை உருவாக்க முனைகிற, ஹிந்துத்துவா சக்திகளின் பின்புலத்தில் இயங்குகிற மோடி அரசு, முந்தைய ஐந்தாண்டுகளில், கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்களை புகுத்தி விட்டது. இவ்வாறு, வைகோ கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE