மருத்துவ கனவை சீரழிக்கும் 'நீட்' தேர்வு: ஸ்டாலின்
மருத்துவ கனவை சீரழிக்கும் 'நீட்' தேர்வு: ஸ்டாலின்

மருத்துவ கனவை சீரழிக்கும் 'நீட்' தேர்வு: ஸ்டாலின்

Added : ஜூன் 08, 2019 | கருத்துகள் (59) | |
Advertisement
சென்னை : 'நீட் தேர்வை, தாமதமின்றி, ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: 'நீட்' தேர்வு, சமூக நீதியை சிதைக்கும் கொடூர ஆயுதமாக இருக்கிறது என, அந்த தேர்வின் முடிவுகள் நிரூபிக்கின்றன. பிற மாநிலங்களை விட, அதிக அளவில், அரசு மருத்துவ கல்லுாரிகளை கொண்டது, தமிழகம். தி.மு.க., ஆட்சியில், மாவட்டம்தோறும் மருத்துவ
மருத்துவ கனவை சீரழிக்கும் 'நீட்' தேர்வு: ஸ்டாலின்

சென்னை : 'நீட் தேர்வை, தாமதமின்றி, ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.



அவரது அறிக்கை: 'நீட்' தேர்வு, சமூக நீதியை சிதைக்கும் கொடூர ஆயுதமாக இருக்கிறது என, அந்த தேர்வின் முடிவுகள் நிரூபிக்கின்றன. பிற மாநிலங்களை விட, அதிக அளவில், அரசு மருத்துவ கல்லுாரிகளை கொண்டது, தமிழகம். தி.மு.க., ஆட்சியில், மாவட்டம்தோறும் மருத்துவ கல்லுாரி என்ற, தொலைநோக்குடன் திட்டமிடப்பட்டு, இது செயல்படுத்தப்பட்டது. அவற்றின் விளைவாக, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,350 இடங்கள் உள்ளன.



அரசு பள்ளியில் படித்து, அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் பிடித்தோரின் எண்ணிக்கை, சராசரியாக, நுாற்றுக்கு, 25 என்ற அளவில் இருந்தது. நீட் தேர்வுக்குப் பின், அந்த எண்ணிக்கை, வெறும், ஐந்துக்கும் கீழ் போய் விட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடம்பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை, 50க்கு மேல் இருந்த நிலையில், நீட் தேர்வுக்கு பின், மூன்று என்ற அளவில் குறைந்து விட்டது.



தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள், நீட் தேர்வுக்கு முன், ஆண்டுதோறும், 2,000க்கும் அதிகமான மருத்துவ இடங்களை, அரசு மருத்துவ கல்லுாரிகளில் பெற்று வந்தனர். ஆனால், அந்த எண்ணிக்கையும், நீட் தேர்வுக்கு பின், நுாறில் ஒரு பங்காக குறைந்து விட்டது. மருத்துவ கனவை சீரழிக்கும், நீட் தேர்வை தாமதமின்றி, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (59)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
09-ஜூன்-201914:54:46 IST Report Abuse
Loganathaiyyan நீ மட்டும் ஒரு சின்ன கவுன்சிலர் என்றால் அதில் நேர்காணல் அப்படி இப்படி என்று ஏன்னா அசத்து அசத்துறே??அது ஏன் சொல்???அது போலத்தான் நன்கு அறிவுள்ளவர்களை தேர்ந்தெடுப்பது தான் இந்த நீட் தேர்வு. உனது 15% சீட் அந்த மருத்துவ கல்லூரி முதலாளிகளுக்கு என்பதை இது விழுங்கிவிட்டதே என்ற எரிச்சலில் உளறாதே. நீ சொல்றதை பார்த்தா நாளைக்கி கால்/அரை/முழு ஆண்டுத்தேர்வு எதற்கு, அது தான் எல்லோரும் புத்தகம் படிக்கின்றார்களே என்று சொல்வாயோ???
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09-ஜூன்-201907:45:17 IST Report Abuse
 nicolethomson முதலில் தனியார் பள்ளிகளை மூட சொல்லுங்க , அரசு பள்ளிக்கு தரமான ஆசிரியர்களை நியமிக்க சொல்லுங்க , எந்த வகையான கோட்டாவும் ,ஒதுக்கீடும், ரிஸர்வேஷனும் இல்லாம ஆசிரியர்களை திறமை அடிப்படையில் மட்டும் நியமிக்க சொல்ல முடியுமா
Rate this:
Cancel
P R Srinivasan - Chennai,இந்தியா
09-ஜூன்-201907:26:18 IST Report Abuse
P R Srinivasan கொள்ளையடித்த திமுக மற்றும் சார்ந்த மருத்துவ கல்லூரிகள் வாயில் மண். கொள்ளையடிக்க முடியவில்லையென்றால் வருத்தம் தான் இருக்கும். வருடத்திற்கு ஒரு மாணவனை அல்லது மாணவியை கொலை செய்துவிட்டு நீட்டினால் மரணம் என்று பிரச்சாரம் செய்வார்கள். ஏழை மாணவர்களும், தொண்டர்களும் கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் பலி கொடுக்கப்படுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X