புதுடில்லி: அரபி கடலில் உருவாகியுள்ள வாயு புயலை எதிர்கொள்ள செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷா ஆய்வு செய்தார். இது தொடர்பாக, உள்துறை அமைச்சக உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.புயல் கரையைக் கடக்கும் குஜராத் மற்றும் அதனால் பாதிப்பு ஏற்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடக மாநிலங்கள் மற்றும் டாமன் - டையூ யூனியன் பிரதேச அரசுகளுடன் தொடர்பு கொண்டு, ஏற்பாடுகள் குறித்த தகவல்களை சேகரிக்கும்படி, அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE