புதுச்சேரி:மாடி தோட்டம் குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் குருமாம்பட்டில் நடந்தது.இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவி மூலம், புதுச்சேரி நகர மக்களுக்கு மாடி தோட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. குருமாம்பட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி துவக்கி வைத்தார். பூச்சியியல் வல்லுனர் நித்யா விஜயகுமார் வரவேற்றார். காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன், மாடித்தோட்ட அமைப்பு மற்றும் பராமரிப்பு குறித்த தொழில் நுட்பங்கள் பற்றி கூறினார். 'என் மாடி என் தோட்டம்' தலைப்பில், குழு செயலர் சந்தானம் பேசினார். இந்த நிகழ்ச்சியில், 60க்கும் மேற்பட்ட நகர்புற வாசிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE