புதுச்சேரி:புதுச்சேரி மீனவர் வலையில், 500 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் திருக்கை மீன் சிக்கியது.கீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் மூவர் நேற்று தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து பைபர் படகு மூலம் கடலில் மீன்பிடிக்க சென்றனர். கடலின் கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மெகா சைஸ் திருக்கை ஒன்று சிக்கியது. உடன் அதனை, தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு மிகுந்த சிரமத்திற்கிடையே இழுத்து வந்தனர். அதன் பிறகே அது, ஆடா வகை திருக்கை மீன் என்பது தெரிய வந்தது. சுமார் 500 கிலோ எடை இருந்த ஆடா திருக்கை மீனை, மீனவர்கள் விற்பனைக்காக துண்டு, துண்டாக வெட்டி எடுத்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE