பிஷ்கெக்: கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாக்., பிரதமர் இம்ரான்கானுடன் கைகுலுக்குவதை தவிர்த்தார்.

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான, கிர்கிஸ்தானின் தலைநகர், பிஷ்கெக் நகரில், எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், வருடாந்திர மாநாடு, நாளை (ஜூன் 14) மற்றும் நாளை மறுநாள் ( ஜூன் 15) நடக்க உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பு நாடாக இந்தியா உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க இன்று டில்லியிலிருந்து பிஷ்கெக் நகருக்கு சென்றார். அங்கு சீன மற்றும் ரஷ்ய அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாநாட்டிற்கு வந்த பாக்., பிரதமர் இம்ரான்கானை சந்திக்காமல் பிரதமர் மோடி தவிர்த்தார். பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து 3வது இருக்கை தள்ளி இம்ரான் கான் அமர்ந்திருந்த போதும் அவரை சந்தித்து கை குலுக்கவில்லை. பயங்கரவாதத்தை பாக்., ஆதரிப்பதால் தான் பிரதமர் மோடி இம்ரான் கானை சந்திக்காமல் தவிர்த்தார் என கூறப்படுகிறது. மேலும் பயங்கரவாதிகளுடன் ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என சீன அதிபருடனும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார் என தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE