ஜோத்பூர் ; மான் வேட்டையாடிய வழக்கில், ஆயுதங்களின் உரிமத்திற்கு சான்றிதழ் அளித்தது தொடர்பாக போலியான அபிடவிட் சமர்ப்பித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சல்மான்கான் சமர்ப்பித்த ஆயுத உரிமை சான்றிதழ்கள் குறித்து போலியான அபிடவிட் அளித்தார் என்பது வழக்காகும். ஆனால், சல்மான் வழக்கறிஞர் ஆயுத உரிமம் புதுப்பித்தல் ஆவணங்களை இழந்துவிட்டார். எனினும், அவை உரிமம் புதுப்பித்தலுக்கு அனுப்பப்பட்டது உண்மை தான். தவறான வாக்குமூலத்தை அவர் அபிடவிட்டில் சமர்ப்பித்தல் அவர் நோக்கமல்ல என்று வாதிட்டிருந்தார்.
இதனை அடுத்து, சல்மான் கானை ஜோத்பூர் நீதிமன்றம் இன்று,(ஜூன் 17) விடுவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE