இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முகமது பிலால் கான் என்ற அந்த செய்தியாளர், தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்து வந்தவர். அவர், அடையாளம் தெரியாத நபரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். அவர், தனது நண்பருடன் வெளியே சென்றிருந்தபோது மர்மநபர்கள் தாக்கியதில், உடன் சென்ற நண்பரும் காயமடைந்துள்ளார்.
அவரது கொலையை அடுத்து ஜஸ்டிஸ் ஃபார் முகமது பிலால் கான் ((#Justice4MuhammadBilalKhan)) என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
உயிரிழந்த செய்தியாளரை டுவிட்டரில் 16,000 பேரும், யூடியூப், பேஸ்புக்கில் 22,000 பேரும் பின் தொடர்கின்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE