பீஜிங், :சீனா - வடகொரியா எல்லைப் பகுதியில் நேற்று திடீர் என பூமி பலமாக அதிர்ந்தது. இந்த நில அதிர்ச்சிக்கு காரணம் வடகொரியாவின் அணு குண்டு பரிசோதனையாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்தி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. இருநாட்டு எல்லையில் நேற்று நடந்த இந்த திடீர் நில அதிர்வுக்கு காரணம் வடகொரியா நடத்திய அணு குண்டு சோதனையாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE