கோவை:கணினி ஆசிரியர்களுக்கு இன்று நடைபெறும் போட்டித்தேர்வில், கோவையில், 2,200 பேர் எழுதுகின்றனர்.அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 814 கணினி பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மார்ச், 1ல் வெளியிட்டது. மார்ச், 20 முதல், ஏப்., 10 வரை, 'ஆன்லைன்' வழியில், விண்ணப்ப பதிவு நடந்தது.'ஆன்லைன்' மூலம் நடத்தப்படும் இத்தேர்வை, தமிழகம் முழுவதும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். கோவையில், காருண்யா பல்கலை, ஆதித்யா தொழில்நுட்பக் கல்லுாரி, இன்போ பொறியியல் கல்லுாரி, கதிர் பொறியியல் கல்லுாரி, கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி உட்பட எட்டு மையங்களில் தேர்வு நடக்கிறது; 2,200 பேர் எழுதுகின்றனர்.தேர்வுகளை கண்காணிக்க கூடுதல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதன் முறையாக 'ஆன்லைன்' மூலம் தேர்வு நடப்பதால், விரைவில் முடிவு வெளியிடப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE