தி.மு.க.,வை துடைத்தெறியுங்கள்  எச்.ராஜா வேண்டுகோள்
தி.மு.க.,வை துடைத்தெறியுங்கள் எச்.ராஜா வேண்டுகோள்

தி.மு.க.,வை துடைத்தெறியுங்கள் எச்.ராஜா வேண்டுகோள்

Updated : ஜூன் 24, 2019 | Added : ஜூன் 24, 2019 | கருத்துகள் (8) | |
Advertisement
திருப்பரங்குன்றம் : ''தி.மு.க.,வை துடைத்தெறிய, மக்கள் தயாராக வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.மதுரை, திருப்பரங்குன்றத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: 'ஹேமாவதி, ஹேரங்கி அணைகளை, கர்நாடகா கட்டியதில் ஆட்சேபனை இல்லை' என, சட்டசபையில், 1970 மார்ச், 6ல் கருணாநிதி கூறினார். இதை விட, தமிழகத்திற்கு பாவச்செயல் உண்டா. கருணாநிதி சென்னைக்கு செய்த புண்ணியம்,

திருப்பரங்குன்றம் : ''தி.மு.க.,வை துடைத்தெறிய, மக்கள் தயாராக வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.




latest tamil news


மதுரை, திருப்பரங்குன்றத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: 'ஹேமாவதி, ஹேரங்கி அணைகளை, கர்நாடகா கட்டியதில் ஆட்சேபனை இல்லை' என, சட்டசபையில், 1970 மார்ச், 6ல் கருணாநிதி கூறினார். இதை விட, தமிழகத்திற்கு பாவச்செயல் உண்டா. கருணாநிதி சென்னைக்கு செய்த புண்ணியம், ஏரியை அழித்து, வள்ளுவர் கோட்டம் கட்டியது.



தி.க., - தி.மு.க., இருக்கும் வரை, தமிழகத்தில் நல்லதே நடக்காது. இதற்கு எடுத்துக்காட்டு, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன். 'ஜோலார்பேட்டையில் இருந்து, சென்னைக்கு தண்ணீர் எடுத்து சென்றால், போராட்டம் வெடிக்கும்' என்கிறார். உள்ளூரில் உள்ள சக தமிழருக்கே, தண்ணீர் தர மறுத்தால், வேறு எங்கிருந்து பெற முடியும்?



latest tamil news


தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். காங்., - எம்.பி., திருநாவுக்கரசர், பதவி வெறிக்காக கட்சி மாறியவர். அவர் செல்லாத கட்சியே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

I love Bharatham - chennai,இந்தியா
24-ஜூன்-201915:35:35 IST Report Abuse
I love Bharatham ராஜா அவர்கள் மீது ஏன் இவளவு பொய் பிரச்சாரங்களை செய்கிறது எதிர் கட்சிகள் என தெரிய வில்லை ....மானமுள்ள எந்த இந்துவும் ...இவரை எதிர்க்க கூடாது .....மாறாக உலகத்தில் உள்ள ஒரே இந்து நாடு நமது நாடு என நம் உரிமையை பெற வேண்டும்
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-ஜூன்-201913:41:35 IST Report Abuse
Rafi மக்கள் எவ்வளவுதான் இவரை தூக்கி எரிந்தாலும், மக்கள் இவரை ஏற்று கொண்டது போல் புருடா விடுவதை பார்த்தால் வடிவேலு தோற்றுவிடுவார் போல் இருக்கு.
Rate this:
Cancel
24-ஜூன்-201911:16:53 IST Report Abuse
ருத்ரா ஏரிஎல்லாம் கட்டடமாக்கி நீரநிலை ஆக்ரமிப்பு எல்லாம விற்று தீர்ந்ததை மக்கள் இந்த தண்ணீர் தவிப்பில் புரிந்து கொண்டு தெளிவாக யோசிக்க தொடங்கி இருப்பர். தமிழகம் செழிக்க இலவ(விஷ)த்தை தவிர்த்தல் வேண்டும் எதையும் எதிர்பார்க்காமல் இளைஞர்களும் பெண்களும் தன்னம்பிக்கையுடன் பணிசெய்ய ஆரம்பித்திருப்பதே நல்லதற்கான அறிகுறி. ராஜா அவர்கள் தண்ணீருக்கான துரித நல்ல திட்டத்திற்கு வழி வகுக்க வலியுறுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X