திருப்பரங்குன்றம் : ''தி.மு.க.,வை துடைத்தெறிய, மக்கள் தயாராக வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.

மதுரை, திருப்பரங்குன்றத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: 'ஹேமாவதி, ஹேரங்கி அணைகளை, கர்நாடகா கட்டியதில் ஆட்சேபனை இல்லை' என, சட்டசபையில், 1970 மார்ச், 6ல் கருணாநிதி கூறினார். இதை விட, தமிழகத்திற்கு பாவச்செயல் உண்டா. கருணாநிதி சென்னைக்கு செய்த புண்ணியம், ஏரியை அழித்து, வள்ளுவர் கோட்டம் கட்டியது.
தி.க., - தி.மு.க., இருக்கும் வரை, தமிழகத்தில் நல்லதே நடக்காது. இதற்கு எடுத்துக்காட்டு, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன். 'ஜோலார்பேட்டையில் இருந்து, சென்னைக்கு தண்ணீர் எடுத்து சென்றால், போராட்டம் வெடிக்கும்' என்கிறார். உள்ளூரில் உள்ள சக தமிழருக்கே, தண்ணீர் தர மறுத்தால், வேறு எங்கிருந்து பெற முடியும்?

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். காங்., - எம்.பி., திருநாவுக்கரசர், பதவி வெறிக்காக கட்சி மாறியவர். அவர் செல்லாத கட்சியே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.