வேலுார்:''பாலாற்றில் மணல் கடத்திய, 613 பேர் கைது செய்யப்பட்டு 1,035 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,'' என, வேலுார், எஸ்.பி., பிரவேஷ் குமார் கூறினார்.
அவரது பேட்டி:வேலுார் மாவட்டம், திருப்பத்துாரில் இருந்து, ஓச்சேரி வரையுள்ள பாலாற்று பகுதிகளில் நடக்கும் மணல் கடத்தலை தடுக்க, தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஜனவரி முதல் ஜூன், 23 வரை, மணல் கடத்தியதாக, 984 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மொத்தம், 732 மாட்டு வண்டிகள் உட்பட, 1,035 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, மணல் கடத்தலை தடுக்க, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE