ராஞ்சி: 'மோடிகள் எல்லாம் திருடர்கள்' என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடகாவில், சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் தலைவர் ராகுல், 'மோடிகள் எல்லாம் திருடர்கள்' என கூறினார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த பிரமோத் குமார் என்பவர் ராஞ்சி கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மோடி சமுதாயத்தினரை குறிவைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்தது ஆட்சேபனைக்குரியது. அவரின் இந்த கருத்து, அந்த சமுதாய மக்களை காயப்படுத்தியுள்ளது. ராகுல், 20 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறியுள்ளார். மேலும், ராகுல் பேசிய ஆடியோ நகலையும் இணைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ராஞ்சி ஜூடிசியல் மாஜீஸ்திரேட் விபுல் குமார், வரும் ஜூலை 3ம் தேதி ராகுல் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும் எனக்கூறி, சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE