திருப்பூர்: தமிழகத்தில், கோவில் செயல் அலுவலர்கள், 81 பேரை, ஹிந்து அறநிலையத் துறை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. '30க்குள், புதிய பணியிடத்தில் சேராவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஹிந்து அறநிலையத் துறை சார்பில், கோவிலை நிர்வகிக்க, உண்டியல் வருவாயைப் பொறுத்து, இணை கமிஷனர், உதவி கமிஷனர் மற்றும் நான்கு நிலைகளில், செயல் அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.இரண்டு முதல், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்றும் அலுவலர்கள், குறிப்பிட்ட இடைவெளியில், இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.தமிழகம் முழுவதும், முதல்நிலை செயல் அலுவலர்கள், ஒன்பது பேர்; இரண்டாவது நிலையில், 21 பேர்; மூன்றாம் நிலையில், 40 பேர்; நான்காம் நிலையில், 11 பேர் என, 81 செயல் அலுவலர்கள், அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.ஹிந்து அறநிலையத் துறை முதன்மை செயலர், பனீந்தர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இடமாறுதல் செய்யப்பட்டோர், 30ம் தேதிக்குள் பொறுப்பேற்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட செயல் அலுவலர் மற்றும் அவர்களை பணியில் இருந்து விடுவிக்கத் தவறிய அலுவலர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE