பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே, 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எளம்பலுார் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்,66, இவர், இதேபகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பிப்., 22ம் தேதி, இவரது கடைக்கு வந்த, இதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து, சிறுமியின் தாய் பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்தார். புகாரின் பேரில், மகளிர் போலீசார் தர்மலிங்கத்தை போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், தர்மலிங்கம் ஜாமினில் வெளிவந்தார்.
இந்த வழக்கு பெரம்பலுார் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி தீர்ப்பளித்தார். அதில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின்படி ஐந்து வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், விதித்து தீர்ப்பளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE